திங்கள், 21 டிசம்பர், 2009

மார்கழி மாத விநாயகர் சதுர்த்தி விழா (20 டிசம்பர் 2009 )

மார்கழி மாத விநாயகர் சதுர்த்தி விழா ஆலய ஓதுவார் மூர்த்தி திருவரங்கையயாதி மற்றும் ஓதுவார் மகேஷ் அவர்களின் திருமுறை இசைக் கச்சேரியுடன் கூடிய கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இனி புகை படங்களும் காண் ஒளியும்:



திருஞானசம்பந்தர் அருளிய திருமாலை மாற்று - மூன்றாம் திருமுறை...



திரு நாவுக்கரசர் அருளியது. தனித் திருக்குறுந்தொகை. திருமுறை 5:90:10

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மா மணிச்சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுகயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.

பொருள் விளக்கம்:

விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக