மார்கழி மாத விநாயகர் சதுர்த்தி விழா ஆலய ஓதுவார் மூர்த்தி திருவரங்கையயாதி மற்றும் ஓதுவார் மகேஷ் அவர்களின் திருமுறை இசைக் கச்சேரியுடன் கூடிய கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இனி புகை படங்களும் காண் ஒளியும்:
திருஞானசம்பந்தர் அருளிய திருமாலை மாற்று - மூன்றாம் திருமுறை...
திரு நாவுக்கரசர் அருளியது. தனித் திருக்குறுந்தொகை. திருமுறை 5:90:10
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மா மணிச்சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுகயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.
பொருள் விளக்கம்:
விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்.
திங்கள், 21 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக