திங்கள், 30 நவம்பர், 2009

அருள்மிகு செண்பக விநாயகர்


முன்னுரை...

திருச்சிற்றம்பலம்

அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயம் ஒரு வரப்பிரசாதம்.

அன்றாடம் மிகச் சரியாக "குறித்த நேரத்தில்" கட்டொழுங்கோடு நடைபெறும் பூஜைகள் பக்தி நெறி என்றால், வாரந்தோறும் நடைபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கான சமயப் பள்ளியும், இசை மற்றும் நடனப் பள்ளியும், மேலும் பெரியவர்களுக்கான சைவ சமயப் பள்ளியும் ஞான நெறியின் பாங்கேயாகும்.

இங்கே திருமுறையும், சைவமும் இரு கண்கள். இவ்விரு செல்வங்களையும் அனைத்து மக்களும் பெற்றுப் பயனடையும் பொருட்டே ஆலயம் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்கிறது.

அந்நிகழ்வுகளை பதிவு செய்து பலருங்காண வழிவகுப்பதே இவ்வலைப்பூவின் நோக்கம்.

எம்பெருமானாம் அருள்மிகு செண்பக விநாயகரின் திருவடிகளை வணங்கிப் போற்றி வலைப்பூவை துவங்கும் வேலை இது.